பாடலாசிரியர் ந முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு விழா!

1597384442 7112

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக இருந்த ந முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சீமான் இயக்கிய வீர நடை படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான ந முத்துக்குமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றிய போது பல மறக்க முடியாத பாடல்களை இயற்றினார். இயக்குனர்கள் செல்வராகவன், ராம் மற்றும் ஏ எல் விஜய் ஆகியோரின் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய அவர் தொடர்ந்து இரு தேசிய விருதுகளைப் பெற்றார்.

இந்நிலையில் மிக இளம் வயதிலேயே மஞ்சள் காமாலை காரணமாக அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவர் பாடல்களின் சிறப்பு பற்றி பகிர்ந்து வருகின்றனர்.