கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்

Jayabalan
Jayabalan

மலர்கிறது முல்லை
கமகமவெனசுவர்க்கமாய்உயர்கிறதே
என் மாடித்தோட்டம்.
கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்
மரண அமைதி அதிர
கருவண்டுகள் இசைக்கிறது
”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.
*
அமேசன்காட்டுத்தீயையும் மிஞ்சி
உலகை வேட்டையாடுதேகொரோனா .
அடாது கொட்டும் வெண்பனியையும்
விழாவாய்கொண்டாடும்
ஒஸ்லோ நகரும் முடங்கியதே.
கூதிரில் தனித்த என் மனைவிக்கு
பூக்களும் இல்லை.
எனினும் எனினும்
இடுக்கண் வருங்கால்நகைக்கும்
புதல்வர்களை விட்டு வந்தேனே..
*
வெற்றியெனக்கோரோனோகிருமிகள் துள்ளும்
பெசன்ற்நகர்கடற்கரையில்
கைவிடப்பட்டபடகுகளில் அஞ்சாமல்
நண்டுகள் தொற்றும் இரவில்.
குடிசைகளுள்
படகெனத்துயிலும் பெண்டிர் மார்பில்
வலிய விரல்கள் ஊர்கின்றன.
*
சாத்தானேஅப்பாலே போ.
மனிதர்கள் கைவிடப்படுவதில்லை.
ஒருபோதும் வெல்லப்படுவதுமில்லை.

.
கூதிர் – WINTER
24.03.2020


**