தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை – கட்சி கொள்கைகளை மீறியமைக்காக விளக்கம்!

111
111

யாழ்மாநகர சபையில் இடம்பெற்ற சாதீய மோதல் தொடர்பில் யாழ்மாநகர சபை உறுப்பினரான ப.தர்சானந்திடம் மூன்று விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்க கோரியுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார் .

எமது கட்சி ஆரம்ப காலம் தொடக்கம் இப்படியான பாகுபாடுகளை ஏற்றுக்கொள்ளாத, சாதீய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத கட்சியாகவே இருந்து வருகிறது.

எனவே எமது கொள்கைகள் ,கோட்ப்பாடுகளை தர்சானந்த் மீறி இருக்கின்றார் .

சந்தர்ப்பம் சூழ்நிலைகளுக்கும் அப்பால் இப்படியான வார்த்தை பிரயோகங்களை அவர் பயன்படுத்தியது மிகவும் தவறானது .

அந்த வகையில் அவரிடம் சில விடயங்கள் தொடர்பில் கட்சியினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

முக்கியமாக இதுவரை காலமும் அவரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ,அவரை ஆத்திரமூட்டும் சந்தர்ப்பத்திலும் இப்படியான சொல்லாடல்களை ஏன் பயன்படுத்தினார் என்ற காரணத்தையும் அவரிடம் கோரியுள்ளோம்,அதேவேளை அவர் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட இருக்கின்றார் என்பதையும் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் எமது செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார் .