கூட்டமைப்பின் தலைவராவதற்குரிய தகுதி சேனாதிராஜாவிற்கு உண்டு – சி.வி.கே தெரிவிப்பு

maxresdefault 2
maxresdefault 2

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஒதுங்கியிருக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக மாவை சேனாதிராசாவே செயற்படுவார் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ்க்குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இம்முறை பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா போட்டியிடுவார்கள் எனவும் அவ்வாறே கூட்டமைப்பில் இருந்து இரா.சம்பந்தன் ஒதுங்கும் பட்சத்தில் அவரை மேலான நிலையில் வைத்து மாவை.சேனாதிராசா கூட்டமைப்பின் தலைவராக செயற்பட வைப்போம் என தெரிவித்தார்.

சி.வி.கே சிவஞானம் அவர்கள் தமிழ்க்குரலுக்கு வழங்கிய நேர்காணலின் முழுமையான ஒளி வடிவம் உங்கள் பார்வைக்கு