தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சபேசன் மறைவு!

sabeshan sanmugam1
sabeshan sanmugam1

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சண்முகம் சபேசன் இன்று (29-05-2020) மெல்பேர்ணில் காலமானார்.

மெல்பேர்ணில் வசித்து வந்த சபேசன் அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அவுஸ்திரேலியாவிற்கான பரப்புரைப் பொறுப்பாளராக கடமையாற்றியதுடன், மாமனிதர் தில்லை ஜெயக்குமார் மறைவிற்கு பின்பு தமிழீழ விடுலைப் புலிகளால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விக்டோரியா மாநிலத்திற்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிவரை தமிழ்த் தேசியத்தின்மீதும் தலைவர் பிரபாகரன்மீதும் ஆழமான பற்றுறுதிகொண்டு செயற்பட்டவர் சபேசன் அவர்கள் என்று அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.