ரணில் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது – சுகாதார அமைச்சர்

1585710808 pavithra 2
1585710808 pavithra 2

“உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதா அமைச்சுக்கு 230 மில்லியன் டொலர் நிவாரண நிதி வழங்கியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது. கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு உலக சுகாதார ஸ்தாபனம் 1.9 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கையிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன காரியாலயம் ஊடாக வழங்கியுள்ளது.” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“1.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரண நிதி உலக சுகாதார ஸ்தாபனத்தில் இலங்கைக் காரியாலயம் ஊடாகவும், 1.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரண நிதி இந்நியாவின் சியரோ நிறுவன காரியாலயம் ஊடாக கிடைக்கப் பெற்றது.

இந்த நிவாரண நிதியத்தில் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 8 இலட்சத்து 55 ஆயிரத்து 869 அமெரிக்க டொலர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை காரியாலயம் ஊடாக செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செலவுகள் எவையும் சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்படவில்லை.

இரசாயன பரிசோதனையை முன்னேற்றகரமாக முன்னெடுக்கும் நோக்கில் அத்தியாவசிய மருத்தவ உபகரண கொள்வனவுக்கான 6 இலட்சத்து 86 ஆயிரத்து 716 அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. நோய் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 79 ஆயிரத்து 915 அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும், விழிப்புணர்வூட்டும் நடடிக்கைகளுக்காக 89 ஆயிரத்து 238 அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

கிடைக்கப் பெற்ற நிதியத்தில் மிகுதியாக உள்ள 10 இலட்சத்து 78 ஆயிரத்து 915 அமெரிக்க டொலர் கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு வழங்குவதாக உலக சுகாதர ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 2021 டிசம்பர் மாதம் வரையில் இலங்கை முன்னெடுக்கும் சுகாதார நவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 2.27 மில்லியன் அமெரிக்க டொலரை தம்வசம் வைத்துக் கொள்வதாக உலக சுகாதா ஸ்தாபனம் அறிவித்துள்ளது” – என்றுள்ளது.