கருணாமீது நடவடிக்கை எடுங்கள் – அரசைக்கோரும் முன்னணி!

v.manivannan
v.manivannan

மூவாயிரம் இராணுவத்தினரைக்கொன்ற கருணாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

சில தினங்களுக்கு முன்னர் ஆனையிறவில் தான் மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றதாக பிரச்சார மேடையில் கருணா என்று அழைக்கப்படும் முரளிதரன் தெரிவித்திருந்தார்.

இந்தவிடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மணிவண்ணன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போதே கருணாமீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.