தமிழ்நாட்டில் தீவிரம் காட்டும் கொரோனா: இன்றும் 4000ஐ தாண்டியது பாதிப்பு!

Coronavirus Tamilnadu
Coronavirus Tamilnadu

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 510 ஆக உயர்ந்துள்ளன.

இதேவேளை, சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள போதும் கடந்த 3 நாட்களாக அங்கு ஓரளவுக்கு பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் மொத்தமாக 68 ஆயிரத்து 254 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், 2 ஆயிரத்து 186 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று ஒரே நாளில் 34 ஆயிரத்து 831 மாதிரிகள் கொரோனா பரிசோதனை உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.