இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை (2076)ஆக அதிகரித்துள்ளது.
குறித்த இருவரும் பஹ்ரேனில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் (162) பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து (1903) பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் (11) பேர் உயிரிழந்துள்ளனர்.