பிரதமர் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்க தீர்மானம்!

mahinda 111
mahinda 111

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செல்வாக்கினை அதிகரிக்கும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ இம்முறை கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர் பிரசன்ன ரணதுங்க ,கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 425,000 அதிகமான வாக்குகள் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 384,448 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

நீண்ட காலமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மஹிந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 423,529 வாக்குகளை பெற்றிருந்தார்.

இந்நிலையில் 1994ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 464,588 வாக்குகளை பெற்றுக் கொண்டார். அந்த சாதனையை முறியடிக்க மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரையில் அதிக வாக்குகளை 2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 500,566 வாக்குகளை அவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.