கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களை வைத்திருந்த இரண்டு நபர்களை காவல்துறையினர் இன்று(13) கைது செய்துள்ளனர்.
மாளிகாவத்தை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஒருவரிடமிருந்து 3.80 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து மற்றைய சந்தேக நபரிடமிருந்து 310 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.