நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பு

paralumanram
paralumanram

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடருக்குரிய தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான முன்மொழிவுகளை எதிர்வரும் 16ம் திகதி சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான முடிவு கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்சிப் பிரதிநிகளுக்குரிய உறுப்பினர் தெரிவுகளுக்கான முன்மொழிவுகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு முன்னர் நாடாளுமன்ற செயலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணைகள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்குரிய நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.