முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதவான் லங்கா ஜயரத்ன வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்ட மா அதிபர் முன்வைத்த மனு குறித்த விசாரணையை நாளை மறுதினம் எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்ஜுல திலகரத்ன நேற்று தீர்மானித்துள்ளார்.
இதன்படி, அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.