கைதான மாணவர்கள் பிணையில் விடுதலை

Pinai
Pinai

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 மாணவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இன்று(14) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 08 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த மோதல் தொடர்பில் கருவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.