சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க கால அவகாசம்

defence1
defence1

அனுமதிப்பத்திரம் அற்ற ஆயுதங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பிரதேச செயலக அலுவலகங்களில் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்பு காலம் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு 09 ஆம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோதமாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய முப்படை உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இவ்வாறு அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை ஒப்படைக்குமாறும், இராணுவத்தை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் இராணுவத்தில் சேருமாறும் அல்லது இராஜிநாமா செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.