ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ

90 d 1
90 d 1

ஹட்டன் பிரதேசத்தின் பிரதான குடி நீர் பிறப்பிடமான ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த தீ இன்று சுமார் காலை வைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக காட்டுப்பகுதியில் பல ஏக்கர்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , இந்த தீ காரணமாக வனப்பகுதியில் காணப்படும் நீரூற்றுகள், அற்றுப்போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது.

அத்துடன் தீயினால் எமது நாட்டுக்கே உரியதான அரிய வகை தாவரங்கள், வன விலங்குகள் உயிரினங்கள், உட்பட மருந்து மூலிகைகள் ஆகியன அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.