சின்னம் உட்பட பிரச்சினை தீர்ப்பதற்காக 10 பேர் கொண்ட குழு

1 dds
1 dds

புதிய கூட்டணியின் சின்னம் உட்பட பிரச்சினை தீர்ப்பதற்காக 10 பேர் கொண்ட குழுவை நியமிக்க ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணங்கியுள்ளனர்.

கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற விசேட சந்திப்பில் புதிய கூட்டணி சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் ரணில் அணியின் 5 பேர் , சஜித் அணியின் 5 பேர் என 10 பேர் கொண்ட குழுவை நியமித்து நாளை  அவர்கள் கூடி தீர்மானம் ஒன்றை எடுப்பது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதனால், நாளை  நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.