நாடளாவிய ரீதியில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை!

6 yuy
6 yuy

நாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களாலேயே குறித்த வழக்குகள் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 26 ஆயிரம் கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், குறித்த சிறைச்சாலைகளில் 12 ஆயிரம் பேருக்கான இட வசதிகளே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.