தேர்தல் தொடர்பாக விசேட கூட்டம்

1oad 1
1oad 1

இம்முறை தேர்தலில் 12,000 இற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. குறித்த வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பெற்றுக்கொள்வதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதன் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய அவர்களை இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.