வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் – பணிகள் ஆரம்பம்!

1 dd 1
1 dd 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இதற்காக பணிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, பலாலி, இரணைமடு, கேப்பாவிலவு போன்ற பகுதியில் இந்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் இந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

அத்துடன், விமானப்படை முகாம்களிலேயே இந்த நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.