கொரோனா நோயினை மறைத்தவர் தொடர்பான தகவல்கள்

90 jj
90 jj

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டமையினால் களுபோவில வைத்தியசாலையின் 5ஆம் அறை நேற்றைய தினம் மூடப்பட்டது.

அங்கிருந்த 15 பேர் நோயாளிகள் மற்றும் வைத்தியர்கள் உட்பட சுகாதார பணியாளர்கள் 20 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை இயக்குனர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த 15 நோயாளிகளும் ஹோமாகம ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வைத்தியசாலை ஊழியர்கள் களுபோவில வைத்தியசாலையின் விசேட கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட நோயளி தெஹிவளை – நெதிமால பிரசேத்தை சேர்ந்த 60 வயதுடையவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் நேற்று மாலை IDH வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். இந்த நபர் தனது நோயை மறைப்பதற்கு முயற்சித்தவர் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.