நீர்கொழும்பு நபர் வசித்த பிரதேசம் முடக்கம்

5 bg 0
5 bg 0

கொரோனா வைரஸினால் நேற்றையதினம் உயிரிழந்த நபரின் வீடு உள்ள நீர்கொழும்பு – போருதோட்டை பகுதியை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

அத்துடன் இறந்த நபரது வீட்டிலுள்ள 16 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்களின் சங்கத் தலைவர் உப்புல் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை சிலர் நாட்டிற்குள் தேவையற்ற வகையில் அச்சத்தை ஏற்படுத்தும் வதந்திகளைப் பரப்பிவருவது கொரோனா ஒழிப்பு முயற்சிகளுக்குப் பெரிய தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.