இன்று கூடும் கட்சி தலைவர்கள்: கொரோனா அனர்த்தம்

3 d
3 d

அலரி மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலை குறிப்பாக, கொரோனா அச்சுறுத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.