மல்வத்து ஹிரிபிட்டிய பகுதியில் தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்ட நபர் ஒருவர் தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (01) மாலை 3.40 அளவில் இடம்பெற்றதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
37 வயதான குறித்த நபர், தனது 28 வயதான மனைவியையும் 3 வயதான தனது மகளையும் கொலை செய்துள்ளார்.
சடலங்கள் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.