40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபா நிதியுதவி

7 GP
7 GP

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அரசு  கவனம் செலுத்தியுள்ளது.

இது குறித்து அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன விளக்கமளிக்கையில்,

“அரச ஊழியர்கள் மற்றும் நிரந்தர வருமானம் பெறுபவர்களைத் தவிர்ந்த ஓய்வூதியம் பெறுவர்கள், ஊனமுற்றோர், வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், சுய தொழிலில் ஈடுபடுவோர், சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தித் திட்டத்துடன் தொடர்புடையர்களை தவிர்ந்த சுமார் 40 இலட்சம் பேர் தற்போதைய நிலையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த இக்கட்டான காலப்பகுதியில் இவர்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவது குறித்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, மருந்துகள் மற்றும் எரிபொருள் தவிர்ந்த அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைத் தவிர்க்க அல்லது கட்டுப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது” – என்றார்.