மிக் விமானக் கொள்வனவு மோசடி: உதயங்க வீரதுங்கவுக்குப் பிணை!

 குரல் 3
குரல் 3

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் ராஜபக்சக்களின் உறவினருமான உதயங்க வீரதுங்கவுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று (03) பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது பிணை விதிகளை பூர்த்தி செய்ய மார்ச் (24)ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு அவரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.

உதயங்க வீரதுங்க பெப்ரவரி (14) ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டனர். அதன்போதே அவர் கைது செய்யப்பட்டார்.

இதுவரைகாலமும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மிக் விமானக் கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்து நல்லாட்சி அரசால் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்ததுடன் அவருக்கு எதிராக சர்வதேச பிடியாணையையும் பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.