தனிமையாக காணப்படும் தியத்தலாவை தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்!

88f1d9f
88f1d9f

தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்புக்கான தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் வெறுமையாகியுள்ளது எனத் கூறுப்படுகின்றது.

குறித்த மத்திய நிலையத்தில் தங்கியிருந்த அனைவரும் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதுடன், இறுதியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்த 33 பேரும் இன்று (03) அவர்களது வதிவிடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 479 பேர் இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வதிவிடங்களுக்கு சென்றுள்ளனர்.

முதன்முதலாக சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்களே இங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.