ஆராதனையில் பங்கேற்று மறைந்திருப்போர் அடையாளப்படுத்துக!

1 1 1
1 1 1

அரியாலையில் இடம்பெற்ற ஆராதனையில் பங்கேற்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் யாராவது மறைந்திருந்தால், உடனடியாக தங்களை அடையாளப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சுவிஸ் போதகர் ஒருவரால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தற்போது ஒவ்வொருவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் நெருங்கிப் பழகிய 325 பேர் வரையிலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் அந்த தேவாலயத்துக்குச் சென்று இன்றுவரை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சிலர் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறு இருப்பவர்கள் பற்றியத் தகவல்களைத் தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் தாமாக முன்வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.