கொரோனா தொற்றாளிகளுக்கு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு!

download 1 4
download 1 4

உலககில் பலரை தாக்கிகொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக இலங்கை மாணவி மெத்தை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

களுத்துறை – நாகொட தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தில் முதலாம் ஆண்டு தாதி மாணவியே இந்த மெத்தையை உருவாக்ககும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் போது ஒரே நாளில் பல நோயாளிகளை கையாள வேண்டும். எனினும் அது ஆபத்தான நடவடிக்கை என்பதனால் தொலைவிலிருந்து தொலைநிலை(ரிமோட்) ஊடாக தொற்றாளிகளை கையாளும் மெத்தை ஒன்றை குறித்த மாணவி உருவாக்கியுள்ளார்.

அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ந்து கை கழுவுவதற்காக தொலைநிலை(ரிமோட்) ஊடாக பாதுகாப்பாக நீர் வழங்கும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த செயல்முறையை உருவாக்கிய மத்துகம கீதா நந்த உதயசிறியின் மகளான சந்தலி நிப்மா என்ற மாணவியே தனது தந்தை மற்றும் சித்தப்பாவின் உதவியுடன் இந்த மெத்தையை உருவாக்கியுள்ளார்.

தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் தொலைநிலை(ரிமோட்) ஊடாக நோயாளியை பக்கம் மாற்றுதல்,நிமிர்த்துதல் உட்பட பல செயல்முறைகளை இந்த மெத்தையின் மூலம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் தொலைநிலை(ரிமோட்) ஊடாக இயக்கும் மெத்தை ஒன்று இதுவரையில் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தயாரிப்பிற்கு தேவையான உதவிகளை வழங்கினால் சர்வதேச மட்டத்தில் இதனை தயாரிக்க முடியும் என குறித்த மாணவி கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.