ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் பேர் கைது!

8 s 1
8 s 1

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் 14 ஆயிரத்து 966 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 3 ஆயிரத்து 751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (06) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6மணி முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான 6 மணித்தியால காலப்பகுதியினுள் மட்டும் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 171 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், 86 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.