சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

9 uuu
9 uuu

கொழும்பு-கல்கிசை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்கொட கங்கையின் நடுவில் அமைந்துள்ள சிறிய தீவொன்றில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது.

பொல்கொட கங்கையின் நடுப்பகுதியில் காணப்படும் தீவொன்றில் நேற்று (18) நாள் தெற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் 3750 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் 7 இலட்சத்து 2000 மில்லி லீற்றர் மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாக்கள் மற்றும் மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் உபகரணங்களும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.