தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 751 ஆக அதிகரித்தது

4 rrr 1
4 rrr 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 10 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். அதையடுத்துக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 751 பேரில் தற்போது 549 நோயாளிகள் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மேலும் 26 வைத்தியசாலைகளில் 137 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.