உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல்

55 es
55 es

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம், கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மூன்று மாதங்களுக்குள் மீள கூட்டப்பட வேண்டும் என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.