பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட 228 கைதிகள்!

.jpg
.jpg

பௌத்த மக்களின் வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு அமைய இவ் ஆண்டு சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதன்படி 228 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கு அமைய இன்று (07) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் அபராதம் செலுத்த முடியாதவர்கள் நன்னடைத்தை அடிப்படையில் விடுவிக்க தகுதியுடைய கைதிகளுக்கே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மூன்று நாட்களில் நன்னடத்தை அடிப்படையில் 62 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கவெருவிடையமாகும்.