ஞாயிறும் திங்களும் நாடளாவிய ஊரடங்கு ? உயர் மட்டத்தில் ஆலோசனை

8 6d
8 6d

எதிர்வரும் ஞாயிறு ,திங்கட்கிழமைகளில் நாடளாவியரீதியில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை ரம்ழான் தினமாக இருப்பதால் அன்றைய தினம் விடுமுறையாகும். அதனால், குறிப்பிட்ட இரண்டு தினங்களும் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுகின்றது.

இந்த வார இறுதியில் ஊரடங்கை எவ்வாறு நடைமுப்படுத்துவது என்பது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெறுவதாகத் தெரிவித்த அதிகாரிகள், பெரும்பாலும் கடந்த வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்ற நிலைமையே இந்த வாரமும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது .