மக்களின் செல்வாக்கை இழந்தமையாலே கூட்டமைப்பு தேர்தல் வேண்டாம் என கூறுகிறது – சந்திரகுமார்

1Chandrakumar
1Chandrakumar

மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு இழந்துவருவதன் காரணமாகவே அவர்கள் தேர்தல் தேவையில்லையென்று கூறிவருவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த நாடு ஒரு தரமான ஜனாதிபதியை பெற்றுள்ளதன் காரணமாக அவர் பின்னால் செல்ல சிறுபான்மை சமூகம் தீர்மானித்துள்ளது.

விரைவாக தேர்தல் நடைபெற்று ஒரு ஸ்திரமான ஆட்சியமையும்போது கடந்த நாலரை வருடத்தில் காணாத அபிவிருத்திகள் கூடிய விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.