ஹட்டனில் மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

3 3
3 3

ஹட்டன் – நல்லதண்ணி பகுதியில் பொறியில் சிக்கி காயமடைந்த கருஞ்சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளது.

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஸ்சபான தோட்டத்தின் வாழைமலை பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் வைக்கப்பட்டிருந்த பொறியில் கருஞ்சிறுத்தை ஒன்று கடந்த செவ்வாய் மீட்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகள் அதிகாரிகள் கருஞ்சிறுத்தையை மயக்கமடையச் செய்து மீட்ட சந்தர்ப்பத்தில் அது காயமடைந்திருந்த நிலையில் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அதன் உடல்நிலை தேறியது.

வனவிலங்குகள் திணைக்களத்திற்கு சொந்தமான உடவலயில் அமைந்துள்ள கால்நடை வைத்தியசாலைக்கு கருஞ்சிறுத்தை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பயனின்றி கருஞ்சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளது .

இதேவேளை குறித்த கருஞ்சிறுத்தை தற்போதைக்கு இந்நாட்டில் வாழும் மிகவும் அரிய வகை இனம் என்பது குறிப்பிடத்தக்கது.