மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16 வது ஆண்டு நினைவு நிகழ்வு

IMG 20200531 WA0014 Copy
IMG 20200531 WA0014 Copy

மட்டக்களப்பில் வைத்து கடந்த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் 16 வது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது .

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தேவ அதிரன் தலைமையில் இடம் பெற்ற அஞ்சலியில் ஊடகவியாலாளர்கள் கலந்து கொண்டனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்திற்கு மூத்த ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் முதல்சுடர் ஏற்றியதையடுத்து ஏனைய ஊடகவியலாளர்கள் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர் .அன்னாரது ஆத்மா சாந்திக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.