இரவு உணவு தாமதமானதால் ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்

0 kk 1
0 kk 1

இரவு உணவு தாமதமானதன் காரணமாக தமது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த மூத்த சகோதரி,அவரது கணவர் மற்றும் அவர்களுடைய 6 வயது பிள்ளைக்கு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்க்பபட்டது.

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் காயமடைந்த மூவரும் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் தல்பே-கஹவென்னகம பகுதியில் வசித்து வரும் 40 வயதுடையவர் என்பதோடு, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமது மனைவி வீட்டிலிருந்து வெளியேறியிருந்ததன் காரணமாக இவ்வாறு அருகிலுள்ள சகோதரியின் வீட்டில் உணவு பெற்றுக்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.