தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சிறுமி

thukku 5
thukku 5

ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என பேசியதால் வாழ விருப்பமில்லை என 15 வயது சிறுமி கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாக்கியராஜா மேனகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி சம்பவதினமான நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தனது படுக்கையறைக்கு சென்ற சிறுமி கூரையில் சல்வாரின் சோல் துணியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட போது அதனை தாயார் கண்டு உடனடியாக சிறுமியை தூக்கில் இருந்து கழற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.