மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

unnamed 1
unnamed 1

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்னார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

தும்பங்கேணி திக்கோடையைச் சேர்ந்த விவசாயியான 59 வயதுடைய சீனித்தம்பி சந்திரசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 39 ம் கொலனியில் உள்ள வயல் பிரதேசத்தில் வேளாண்மையை யானைகளிடம் இருந்து பாதுகாக்க சில விவசாயிகள் ஒன்றினைந்து வயல் ககுதியில் திருட்டு மின்சாரம் பெற்று மின்சார வேலி அமைத்திருந்தனர்

இந்த மின்சார வேலிப் பகுதியில் குறித்த விவசாயின் மாட்டுபட்டி மற்றும் விவசாயம் அமைந்திருந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்து மாட்டுபட்டிக்கு சென்றிருந்த நிலையில் வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள்ளுக் கம்பியை வேலியின் முள்ளுக்கம்பியை பிடித்து மாட்டுபட்டிக்கு செல்ல முற்பட்டபோது மின்சார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்