கருஞ்சிறுத்தை தொடர்பான மரபணு பரிசோதனை!

3
3

அண்மையில் பொறியொன்றில் சிக்கி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த கருஞ்சிறுத்தை தொடர்பான மரபணு பரிசோதனை, பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியல் தொழில்நுட்ப நிலையத்தில் நடத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி பிரதீபா பண்டார தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய,மரபணு பரிசோதனையை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உயிரிழந்த கருஞ்சிறுத்தையின் இரத்த மாதிரியும் தற்போது உயிர்வாழும் ஒருவகை சிறுத்தையின் இரத்த மாதிரியும் பெறப்பட்டு, ஒப்பீட்டு முறையிலான டி.என்.ஏ.சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக பிரதீபா பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.