அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை!

rty
rty

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தராக செயற்பட்டு வந்த கே.பி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த போது இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போல், அர்ஜூன் மகேந்திரனையும் நாட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்துக்கொண்டுள்ள அர்ஜூன் மகேந்திரன் தனது பெயரை கூட மாற்றிக்கொண்டுள்ளார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் விமல் வீரவங்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இட்டுள்ள 21 ஆயிரம் கையெழுத்துகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வீரவங்ச, அவர் அப்படியான ஒன்றை செய்திருந்தால், அது கின்னஸ் சாதனை எனவும் குறிப்பிட்டுள்ளார்.