1,683 ஆக அதிகரித்தது கொரோனாத் தொற்று – நேற்று 40 பேர் அடையாளம்

corona agencies
corona agencies

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 40 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 823 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் தற்போது 849 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 84 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.