குருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது!

 720x450 1
720x450 1

குருநாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், அங்கிருந்த பிறஇடங்களிற்கும் வேகமாக பரவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் முதன்முறைாக குருநாகல் மாவட்டத்தில் மவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகள்அடையாளம் காணப்பட்டன. தற்போது சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் வேறு சில பகுதிகளிலும் இந்த வெட்டுக்கிளிகள் பரவியுள்ளன.

மாத்தகமவில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் அருகிலுள்ள மற்றொரு கிராமத்திற்கும் பரவியது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.

இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து வகையான விவசாய பயிர்ச்செய்கைகளின் இலைகளையும் அழித்து வருகின்றன. இதனால் விவசாய செய்கை முற்றாக பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் திரளாக வந்து வயல்களை சேதமாக்குவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

இந்த வெட்டுக்கிளிகள் கேகாலை மாவட்டத்தில் உள்ள 3 விவாசய சேவை பிரிவுகளில் பரவியுள்ளதாக, கேகாலை மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் ஆர்.பி.என்.எல். ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், அம்பேபுஸ்ஸ, மாவனெல்ல, ரம்புக்கன மற்றும் வரக்கபொல பகுதிகளிலும் வெட்டுக்கிளி தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.

தென்னை, ரப்பர் பயிர்ச்செய்கைகளும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்திலும் வெட்டுக்கிளி தாக்கம் அவதானிக்கப்பட்டது. மாத்தறை, புருகமுவ பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்கமுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வகை வெட்டுக்கிளிகள் மாதாரா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக நெத் நியூஸ் நிருபர்கள் தெரிவித்தனர். இந்த வெட்டுக்கிளிகளின் அறிக்கைகள் மாதாரா, புருகமுவ மற்றும் வாலகாண்டா பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டுகளை விட இந்த வருடம், இந்த வகை வெட்டுக்கிளிகளின் பரவல் அதிகரித்துள்ளதாக விவசாயத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இது அபாயகரமான கட்டமல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.