மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்செத செவன மாடி வீட்டு தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் நேற்று இரவு மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கு அமைய குறித்த குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜும்மா மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை, கொழும்பு 10 என்ற விலாசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (புதன் கிழமை) புதுக்கடை இலக்கம் 04 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.