கொரோனா அனர்த்தத்தினை முன்னிட்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஊடாக, உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சுமார் 32 உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு புதன்கிழமை (3) மாலை கல்முனை சந்தான்கேணி விளையாட்டு அரங்கில் வைத்து உலருணவு வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது உலருணவு பொருட்களை அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க தலைவர் வை .கே . ரஹ்மான் மற்றும் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.