போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது!

0 kk
0 kk

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில்நல்லூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

நல்லூர் பகுதியில் கெரோஜின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்தது கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான இளைஞன் ஒருவரை பொலிஸார் சோதனையிட்டிருந்தனர் அப்போது குறித்த இளைஞனிடம் இருந்து 70 மில்லிக்கிராம் கெரோஜின் போதைப்பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் கெரோஜின் போதைப்பொருள் கைது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.