பொன் சிவகுமாரனின் 46 வது ஆண்டு நினைவு தினம்

IMG 1646 scaled
IMG 1646 scaled

போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 46 வது ஆண்டு நினைவு தினம் உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச்சிலை அமைந்துள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்

உரும்பிராயில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று காலை 8.30 மணிக்கு முன்னாள் பாராளுமன்ற உற்பிபனர் சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த்தேசியக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இவ் அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் உரும்பிராய் வேப்பம்பிராய் வீதியில் அமைந்துள்ள மையனத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் காலை 9 மணிக்கு அஞ்சலிசெலுத்தினர். 

இந்த அஞ்சலிநிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பென்னம்பலம்செயலாளர் கஜேந்திரன் அக்க ட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் அஞ்சலிசெலுத்தினர் உரும்பிராய் பொதுச்சந்தையில் அமைந்துள்ள சிவகுமாரின் திருவுருவ சிலை அமைந்துள்ள இடத்தில் 9.30 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சரவணபவன் சித்தார்த்தன் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகியோர்கலந்துகொண்டு அஞ்சலிசெலுத்தினர்.