இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 70 கடற்படையினர் வெளியேற்றம்!

army
army

கிளிநொச்சி- இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு 70 கடற்படையினர் இன்று (சனிக்கிழமை) வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில், கடந்த 20 ஆம் திகதி,  வெளிசர கடற்படை முகாமில் இருந்து  தனிமைப்படுத்தலுக்காக 167 கடற்படையினர், கிளிநொச்சி- இரணைமடு விமானப்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட கடற்படையினருக்கு, பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் 70 பேர், தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வெளியேறியுள்ளார்களென இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குறூப் கெப்டன் றொகான் பத்திரண தெரிவித்துள்ளார்.

மேலும் எஞ்சியுள்ள 97 கடற்படையினரின்  மாதிரிகள், பி.சி.ஆர் பரிசோதனைக்காக  அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் அவர்களும் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.